பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு வெளி அமைப்புகள் நடத்தும் எந்த நிகழ்ச்சியும், முன்னதாக உரிய அதிகாரிகளின் அனுமதி பெறாமல் நடத்தப்படக் கூடாது என வலியுறுத்தி கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு கல்வி அமைச்சின் செயலாளர் சார்பில் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் திரு. பி.ஆர். கரியவசம் கையொப்பமிட்ட சுற்றறிக்கை கடிதமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தேசியப் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கான அனுமதி கல்வி அமைச்சினால் வழங்கப்பட வேண்டும். அதேவேளை, மாகாணப் பாடசாலைகளுக்கான அனுமதி சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்களத்திடமும் பெறப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில அமைப்புகள் தேவையான அனுமதி பெறாமல் பாடசாலைகளுக்குள் நுழைந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும், இத்தகைய அனுமதி இல்லாத நிகழ்ச்சிகளின் தரத்திற்கும், பாதுகாப்பிற்கும் அமைச்சு பொறுப்பு ஏற்க முடியாது எனவும் சுற்றறிக்கை குறிப்பிடுகிறது.
எனவே, தேசியப் பாடசாலைகளில் நிகழ்ச்சிகள் நடத்த விரும்பும் எந்த நபர் அல்லது அமைப்பும் கல்வி அமைச்சின் முன் அனுமதி பெறுவது கட்டாயம். மாகாணப் பாடசாலைகளின் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் முன் அனுமதி பெற்ற பிறகே நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, மாணவர்களின் பாதுகாப்பையும் கல்வி நிகழ்ச்சிகளின் நம்பகத்தன்மையையும் உறுதிசெய்யும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது






