கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு இசுருபாய, பத்தரமுல்ல, இலங்கை
விடயம்: தேசிய மனநல தினக் கொண்டாட்டம் – 2025
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒருவருடைய ஆரோக்கியம் என்பது “நோய் அல்லது பலவீனம் இல்லாத ஒரு நிலை மட்டுமல்ல, முழுமையான உடல், உள மற்றும் சமூக நலன் ஆகும்”. இதன்படி, ஒரு நபரின் உடல் நலனுக்கு மட்டுமன்றி, மன நலன் மீதும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது என்பது தெளிவாகிறது.
ஒவ்வொரு வருடமும், உலக மனநல தினம் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதியும், தேசிய ஆலோசனை தினம் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியும் அனுசரிக்கப்படுகின்றன.
2025 ஆம் ஆண்டிற்கான உலக மனநல நிதியம் தயாரித்த கருப்பொருள், ‘ஆரோக்கியமான ஆரம்பம், நம்பிக்கையான எதிர்காலம்’ (‘Access to services mental health in catastrophes and emergencies’) என்பதாகும். மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், அனைவரது மனநலனுக்கும் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
இந்த அமைச்சின் பாடவிதானச் சார், வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக் கிளையானது, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மனநலப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் மனநலனை மேம்படுத்துவதற்கும் வருடாந்தம் தேசிய, மாகாண மற்றும் வலய மட்டங்களில் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செயற்படுத்த எதிர்பார்க்கிறது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான மனநல தினக் கொண்டாட்டத்திற்காக, 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை உள்ள காலம் “மனநல வாரம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இணைப்பு 01 இல் குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகளைச் செயற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வேலைத்திட்டங்களை நடத்தும்போது, வலய/கோட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை ஆசிரியர் ஆலோசகரின்) உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும், வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை இணைப்பு 02 ஊடாக 2025.10.21 ஆம் திகதிக்கு முன்னர் counseling.moe@gmail.com என்ற பாடவிதானச் சார், வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக் கிளையின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறும், மேலும், இது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு நீங்கள் வழங்கும் ஒத்துழைப்பை மிகவும் பாராட்டுகிறேன்.
உதாரா டீ. திக்கும்புர மேலதிக செயலாளர் (பாடவிதானச் சார் மற்றும் ஆரம்பக் கல்வி அபிவிருத்தி) செயலாளர் சார்பாக
இணைப்பு இலக்கம் – 01: மனநல வாரச் செயற்பாடுகள்
- உலக மனநல தினக் கொண்டாட்டம் – 2025: இரண்டு வார காலப்பகுதிக்குள், ‘ஆரோக்கியமான ஆரம்பம், நம்பிக்கையான எதிர்காலம்’ என்ற கருப்பொருளைக் காட்டும் பதாகையை (Banner) பாடசாலைக்கு முன்னால் காட்சிப்படுத்துதல் மற்றும் கருப்பொருளுடன் தொடர்புடைய சில வசனங்களைக் காட்சிப்படுத்துதல்.
- சுகாதார மேம்பாட்டுக் கழகம் (School Health Club) மூலம் இளம்பருவ மாணவர்களுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை நடத்துதல்.
- உதாரணமாக: சுவரொட்டிகள் (Posters), பதாகைகள் (Banners)
- இளம்பருவ மாணவர்கள் “Dear Me” எனக் குறிப்பிட்டு எதிர்காலத்தில் தமக்கோ அல்லது உதவி தேவைப்படும் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பிற பிள்ளைகளுக்கோ அநாமதேயக் கடிதங்களை எழுதுதல்.
- கருப்பொருளுடன் தொடர்புடைய விவாதப் போட்டிகளை நடத்துதல்.
- பாடசாலை மாணவர்கள் தங்கள் மற்றும் பிறரின் மனநலனை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை வழங்குதல் மற்றும் அவற்றை உறுதிப்படுத்தப் பலகையில் ஒட்டுவதற்கு (Sticky Notes பயன்படுத்தி) பாடசாலைக்குள் பலகைகளை அமைத்தல்.
- விசேட நிபுணத்துவம் கொண்ட வைத்தியர்கள்/நிபுணர்களின் விசேட உரைகள் மூலம் மாணவர்களுக்கும்/பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வூட்டல்.
- குறும்படங்கள் காண்பித்தல்
- கருப்பொருளுடன் தொடர்புடைய ஓவியங்கள், சுவரொட்டிகள் (Posters) உருவாக்கம் மற்றும் புகைப்படக் கண்காட்சி ஆகியவற்றை பாடசாலை மட்டத்தில் நடத்துதல்.
மொழிபெயர்ப்பில் வேறுபாடுகள் இருப்பின் சிங்களப் பிரதி யை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.








