நாடளாவிய ரீதியில், தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்கான் தடைதாண்டல் பரீட்சைகளை நடத்துவது பற்றிய கலந்துரையாடல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் 2026 ஜூன் 05 ஆம் திகதி இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில், தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவை அதிகாரிகளுக்கான பரீட்சைகளை நடத்துவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய,
1 வது வினைத்திறன்கான் தடைதாண்டல் பரீட்சையை 2026 செப்டம்பர் மாதத்திலும்,
2 வது வினைத்திறன்கான் தடைதாண்டல் பரீட்சையை 2026 அக்டோபர் மாதத்திலும்,
3 வது வினைத்திறன்கான் தடைதாண்டல் பரீட்சையை 2026 டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.








