கல்வி அமைச்சினால் ED/01/29/15/01 இலக்கமிடப்பட்ட 2025.10.29 ஆம் திகதியிடப்பட்டு சகல தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தற்போது தேசிய பாடசாலைகளில் தற்காலிக இணைப்பில் உள்ள ஆசிரியர்களின் இணைப்புக் காலமானது
2026.03.03 வரை நீடிக்கப் படுகிறது எனவும் ஆசிரியர்களின் நிரந்தர சேவை நிலைய அதிபர்கள் உடன்பட்டால் மாத்திரமே குறித்த ஆசிரியர்கள் மேற்கூறிய காலம் வரை இணைப்பைத் தொடரமுடியும் எனவும் தனிப்பட்ட நீடிப்புக் கடிதங்கள் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப் பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான கட்டாய/வருடாந்த இடமாற்றத்தில் புதிய பணியிடங்களுக்கான இடமாற்றக் கடிதம் கிடைக்கப் பெறும் ஆசிரியர்களின் தற்காலிக இணைப்பானது உடன் அமுலுக்கு வரும் வகையில் செயல் வலுவிழக்கும் என்பதுடன் அவர்களைப் புதிய சேவை நிலையத்தில் கடமையைப் பொறுப்பேற்கக்கூடிய வகையில் அதிபர்கள் அவர்களை விடுவித்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்விச் செயலாளருக்குப் பதிலாக மேலதிக செயலாளர்(நிறுவனம்) A.J.S.S எதிரிசூரிய அவர்களால் ஒப்பமிடப்பட்ட இக்கடிதப் பிரதிகள்
மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது





